நவம்பரில் உலக சனத்தொகை 8 பில்லியனைத் தாண்டும்!

நவம்பர் 15ஆம் திகதிக்குள் உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, 2030ல் இது 8.5 பில்லியனாக இருக்கும்.

பிறப்பின் பின் ஆயுட்காலம் அதிகரிப்பதும், இறப்பு வீதம் குறைவதுமே இதற்குக் காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், இறப்பு வீதம் தொடர்ந்து குறையும் மற்றும் 2050ஆம் ஆண்டில் சராசரி ஆயுட்காலம் 77 ஆண்டுகளாக அதிகரிக்கும் என்று வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *