இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா 3 பேர் உயிரிழப்பு!
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, நேற்றைய தினம் (18) நாட்டில் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த உயிரிழப்புக்கள் மூன்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 62 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.