ஆகஸ்ட் மாதம் முதல் மின்சார கட்டணம் அதிகரிப்பு!
மின்சார கட்டண உயர்வு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதுள்ள மின்சாரக் கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மின்சார சபை 130 வீத கட்டண உயர்வை கோரியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்