எரிவாயு தட்டுப்பாடு இம்மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும்?

இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் எரிவாயு (LPG) தட்டுப்பாடு இந்த மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸின் கூற்றுப்படி, ஓமானில் இருந்து 21,000 மெட்ரிக் தொன் எல்பிஜி ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை இரவு மாலைத்தீவு கடற்பகுதியை வந்தடையும், பின்னர் அங்கிருந்து மூன்று சிறிய கப்பல்கள் மூலம் கொழும்பிற்கு எரிவாயு கொண்டுவரப்படும்
இந்த எறிவரு கொடுவரப்பட்ட பின் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து, நீண்ட வரிசையை ஜூலை 31க்குள் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கூறிய பீரிஸ், வரும் காலத்தில் LPG சிலிண்டர்களின் தினசரி உற்பத்தியை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது லிட்ரோ லங்கா நிறுவனம் நாளாந்தம் 12.5 கிலோகிராம் எடையுள்ள 80,000 சிலிண்டர்களை சந்தைக்கு அனுப்புவதுடன், மேலும் 5 கிலோகிராம் கொண்ட 20,000 சிலிண்டர்களும், 2.5 கிலோ எடையுள்ள 20,000 சிலிண்டர்களும் தினசரி விநியோகிக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 12.5 கிலோகிராம் கொண்ட சிலிண்டர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *