இலங்கை தொடர்பில் ஆராய இந்தியாவில் சர்வகட்சி கூட்டம்!

இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடர்பில், ஆராய்வதற்கு இந்திய அரசாங்கம், அந்த நாட்டின் சர்வகட்சி கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூட்டமானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் விபரமளிப்பர் என குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, இலங்கை தற்போதைய நெருக்கடி நிலைமை, தமிழகத்திற்கு ஏதிலிகளாக செல்பவர்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக இந்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரல்ஹாட் ஜோசி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *