எரிபொருளை பெற்றுக் கொள்ள புதிய நடைமுறை!

வாகன சாரதிகளுக்கு வாராந்தம் எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் அனுமதிச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உத்தரவாதமான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய அடையாள இட்டை இலக்கம் மற்றும் வாகன அனுமதிப்பத்திர இலக்க விபரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும். QR உடன் எரிபொருளை நிரப்புவதற்கான இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்தார்.

அனுமதிச்சீட்டு பதிவிற்கு  http://fuelpass.gov.lk/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *