ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவித்தார் பிரதமர் தெரிவிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி ஏற்கனவே அறிவித்தபடி தான் பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு சற்றுமுன் தெரிவித்துள்ளது.
பதவி விலகாவிட்டால் முழு கடையடைப்பு
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகாவிட்டால் அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்