பயத்தால் பதுங்கி வாழும் ஜனாதிபதி கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் தலைமறைவாக இருக்கும் ஒரு ஜனாதிபதி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினரையோ அல்லது ஜனாதிபதியையோ சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மக்கள் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கு வெகுசன ஊடகங்களே ஒரே வழி என அவர் தெரிவித்துள்ளார்.

எனினு  ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்காமல் இருப்பதன் மூலம் அந்த வாய்ப்பையும் பறிக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *