கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல் ஒருவர் பலி 600 பேர் தப்பியோட்டம்!
பொலன்னறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, அங்கு இருந்து 600 இற்கும் அதிகமானோர் தப்பி ஓடியுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்