காதலியுடன் தகாத உறவு நித்திரை கொண்டதால் மாட்டிக் கொண்ட காதலன்!

வீட்டுக்குள் இரகசியமாக புகுந்து இரவு நேரங்களில் தனது 14 வயது காதலியின் தகாத உறவை பேணிவந்த காதலன் நித்திரைக் கொண்டதால் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று கொட்டகதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமியின் பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்து தனித்தனியாக வாழ்க்கை நடத்திவரும் நிலையில், சிறுமி அண்ணனின் மனைவியுடன் (அண்ணி) அவர்களது வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் காதலன் பல சந்தர்ப்பங்களில் அண்ணிக்குத் தெரியாமல் இரகசியமாக வீட்டில் புகுந்து தனது காதலியுடன் சல்லாபம் செய்து வந்ததுடன், அண்ணி விழித்துக் கொள்வதற்கு முன்னர் அதிகாலை வீட்டை விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவ தினத்தன்று காதலியின் வீட்டுக்கு வந்த காதலன் நித்திரை கொண்டதால் – அண்ணி எழுவதற்கு முன்னர் வீட்டைவிட்டு செல்ல முடியாமல் போயுள்ளது.
இதனையடுத்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் காதலன் கொட்டகதெனிய பொலிஸாரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *