நாளை முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய நாளை (24) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பபடவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (23) தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வை வழங்கும்போது அனைத்து வகையான பெட்ரோல் மற்றும் டீசல் 60 ரூபாவால் அதிகரிப்படவுள்ளதாகவும் மண்ணெண்ணெய் 200 ரூபாயை விட அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 74 ரூபாவாலும், ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 78 ரூபாவாலும் டீசல் 56 ரூபாவாலும், சுப்பர் டீசல் விலை 65 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *