தசுன் சானகவின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி அபார வெற்றி!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3 ஆவது ரி- 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் வெற்றியும் ஆஸி. வசம் இருந்த நிலையில், இலங்கை அணித் தலைவரின் அதிரடி அரைச்சதத்தால் வெற்றிக்கனியை இலங்கை அணி ருசித்தது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணியளவில் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

177 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி, 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து, 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணிக்கு, அணித் தலைவர் பக்க பலமாக இருந்தார். கடைசி 3 ஓவர்களில் அதிரடி காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *