ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை முன்மொழியுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால பணிப்புரை விடுத்துள்ளார்.

விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அதிக இழப்பீடு

எந்தவொரு ஊழியரையும் கட்டாய ஓய்வு பெறச்செய்ய மாட்டோம் என்றும் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமான சேவையின் மறுசீரமைப்பு இந்த வருடத்தில் செய்யப்பட வேண்டும் என்றும்,இல்லையெனில் அதனால் அதிகரிக்கப்படும் கடன் ரூ. 315 பில்லியன் என்பது நாட்டு மக்களுக்கு மேலும் சுமையாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *