கோர விபத்து இருவர் உயிரிழப்பு!
கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில்மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
யாழ். அரியாலை பகுதியிலேயே இவ்விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
விபத்து காரணமாக சில மணி நேரம் ரயில் பயணம் தடைப்பட்ட நிலையில் , அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், விபத்தில் சிக்கி கொண்டவர்களையும் காரையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.