அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 2 வருட சிறைத் தண்டனை!

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கிலேயே அவர் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமைச்சருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அதனை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்தது.

அத்துடன் அமைச்சருக்கு 25 மில்லியன் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் அமைச்சர் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *