ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

ரணிலின் நெருக்கமான சகா முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயகவை அண்மையில் அழைத்து ஜனாதிபதி உரையாடியுள்ளார்.

அத்துடன் சுற்றிலும் இருப்பவர்களிடம் இருந்து ரணில் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தனது அண்ணன் மஹிந்தவும் பக்கத்தில் இருந்தவர்களை நம்பியதே இன்றைய அவரின் வீழ்ச்சிக்கு காரணம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்த விடயம் தொடர்பில் அவதானமாக நடந்து கொள்ளுமாறு சாகலவிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *