இலங்கையில் குற்றம் குறைய சவுதி அரேபியா தண்டனைதான் சரியானது!
சவுதி அரேபியாவில் தண்டனைகள் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள், நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அட்டுலுகம சிறுமியின் நிலைமைக்கு காரணமான கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். சவுதியில் போன்று, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
இச் சிறுமியின் பேரிழப்பே இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.