நீர் இல்லை,எரிவாயு தட்டுப்பாட்டால் துர்நாற்றம் வீசும் சடலங்கள்!
ரஷ்யப் படைகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் செவெரோடோனெட்ஸ்க் நகரில் எரிவாயு, நீர் மற்றும் மின்சாரம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரேனிய அதிகாரிகளிடம் தற்போது உள்ள ஒரே தகவல் தொடர்பு, செவெரோடோனெட்ஸ்கில் உள்ள மனிதாபிமான மையம் மற்றும் ஸ்டார்லிங்க்ஸ் (எலோன் மஸ்கின் இணையம்) வழியாக ஒரு மருத்துவமனை ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகின்றது.
நகரில் 90% வீடுகள் ஷெல் தாக்குதலால் சேதமடைந்துள்ளன.
ரஷ்ய தந்திரோபாயங்களை லுஹான்ஸ்க் பிராந்தியத் தலைவரான Serhiy Haida விவரிக்கையில்,
அவர்கள் மூன்று, நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஷெல் தாக்குதல் நடத்திவிட்டு முன்னேறுவார்கள். அவர்களை எதிர்த்து தாக்குபவர்கள் கொல்லப்படுகிறார்கள், பின்னர் ஷெல் தாக்குதல் மீண்டும் தொடங்கப்படும்.
தற்போது வானிலை மிகவும் சூடாக இருக்கிறது. மேலும் செவரோடோனெட்ஸ்கின் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் ரஷ்யர்கள் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லாததால், சடலங்களில் இருந்து துர்நாற்றம் எங்களிடம் உள்ளது.
மேலும், ஒரு மில்லியன் மக்கள் லுஹான்ஸ்க் பகுதி முழுவதும் தண்ணீரின்றி உள்ளனர்.
ஹைடாய் உக்ரேனிய பாதுகாவலர்களை ஹீரோக்கள் என்று விவரிக்கிறார், ஏனெனில் அவர்கள் உக்ரைனின் போர்க்களங்களில் மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளனர் என்றார்