மருத்துவமனையில் தீ விபத்து பிறந்த 11 பச்சிளம் குழந்தைகள் பலி!
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று செனகல் நாட்டில் திவாவோன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டின் ஜனாதிபதி மேக்கி சால் கூறும்போது “பொது மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்ததை நான் வேதனையுடன் அறிந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.