ஜனாதிபதி கோத்தபாய உடனடியாக பதவி விலக வேண்டும் மஹேல தெரிவிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவர் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான குறிப்புக்கு மஹேல ஜயவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
“கோட்டாபய ராஜபக்ச இதைப் படித்ததும், குற்ற உணர்ச்சியிருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த சம்பவங்களுக்கு அவரே நேரடிப் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.