இந்திய நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தது!

இந்திய தமிழ்நாட்டு மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்காக…. 2 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருத்துகள் உயர் ஸ்தானிகர் அவர்களால் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களிடம் இன்று கொழும்பில் கையளிக்கப்பட்டது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இன்னும் பல தொகுதி உதவிப்பொருட்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *