லங்கா IOC விடுத்துள்ள அறிவிப்பு!

லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிக்கு மட்டுமே நேரடியாக பெற்றோல் விநியோகிக்கப்படும் என லங்கா IOC இன்று (20) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கலன்கள், பீப்பாய்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது என லங்கா IOC தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *