அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளமை கட்சியின் முடிவுக்கு எதிரானது மைத்திரிபால தெரிவிப்பு!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளமை கட்சியின் முடிவுக்கு எதிரானது என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் நாடாளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.