நாளை விடுமுறை பிரதமர் ரணில் அறிவிப்பு!

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர, ஏனைய அரச ஊழியர்களை நாளைய தினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு ஒரு பகுதி அரச ஊழியர்கள் சமூகமளிக்காமல் இருப்பார்களானால், எரிபொருளை மீதப்படுத்த முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *