ரணிலுக்கு பச்சைக்கொடி காட்டினார் அதாவுல்லா!
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இப் 11 கட்சிகிளில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 20 வருட தே.கா தலைவர் அதாவுல்லாவின் அரசியல் வரலாறானாது ரணிலை எதிர்த்தே இருந்து வந்ததோடு ரணில் சாராதியாக இருக்கும் பஸ்ஸில் நான் ஒரு போதும் ஏறமாட்டேன் என சபதமிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.