இலங்கையில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் தீர்க்கமான நாட்கள் ரணில் தெரிவிப்பு!

அடுத்த இரண்டு வாரங்கள் தமக்கு மிகவும் தீர்க்கமான நாட்களாக அமையப் போகின்றன என இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காணொளி ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர், போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேசத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். போராட்டத் தளங்கள் மீது அடக்குமுறை ஏவப்படாது என்றும் ரணில் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களுடன் பேசி வருவதாக ரணில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *