புறக்கோட்டை குணசிங்கபுர பஸ் நிலையத்திற்கு அருகில் போராட்டம்!

சமையல் எரிவாயு கோரி புறக்கோட்டையிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு கோரி காத்திருந்த மக்களுக்கு இன்று வரையிலும் எரிவாயு கிடைக்காத நிலையில், வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக புறக்கோட்டை-சவுண்டர்ஸ் பிளேஸ்- குணசிங்கபுர பஸ் நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *