“பேரை ஏரியில் குளிக்க நேரிடும்” புதிய பிரதமருக்கு பிக்குகள் எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆசி வழங்கிய பௌத்த மதத் தலைவர்கள் இலங்கையின் தேசிய நெருக்கடி குறித்து நுட்பமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், புதிய பிரதமர் நேற்று மாலை பல பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறினால் புதிய பிரதமரும் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என பிக்குகள் எச்சரித்தனர்.

“சமீபத்திய சம்பவங்களைப் போலவே, யானையும் பேரை ஏரியில் குளிக்க வேண்டியிருக்கும்,” என்று அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டினர்.

மேலும், நாட்டிலுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு செவிசாய்க்குமாறு வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *