பதவியை மாற்ற முடியாது சஜித் பிரமதாசவின் கடிதத்திற்கு ஜனாதிபதி பதில்!
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை தற்போது மாற்ற இயலாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கடிதத்திற்கு அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சஜித் பிரேததாச அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையெனவும் ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.