அலரி மாளிகைக்கு வெளியே பதற்றம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக வேண்டாமென வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அலரிமாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அலரிமாளிக்கைக்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மைனாகோகாமா மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனை புகைப்படம் எடுத்தபோதே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *