அரசுக்கு எதிராக உள்ளாடைகள் போராட்டம்!
நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸாரின் வீதித் தடைகளில் ஆண், பெண் இருபாலாரினதும் உள்ளாடைகளை காட்சிப்படுத்துவதற்கு போராட்டக்காரர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகக்கோரி பல்வேறு அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணக் கோரி பல்வேறு அமைப்புகளும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவாக தற்போது நூதனமான முறையில் உள்ளாடைப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.