எரிபொருள் நிரப்ப கடும் கட்டுப்பாடுகள்!

எரிபொருள் நிரம்பும் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் இன்னும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளது என்று  பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.

  மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு அதிகபட்சமாக 3,000 ரூபாவுக்கும் மட்டுமே  எரிபொருள் நிரப்ப முடியுமென கூட்டுதாபனம் குறிப்பிடுகின்றது.

 கார், வேன்கள் மற்றும் ஜீப்களுக்கு அதிகபட்சமாக 8,000 ரூபாவுக்கு எரிபொருளை நிரப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ், லொறி மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் செல்லுப்படியாகாது என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.

 எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையிலேயே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *