40 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் இலங்கையை வந்தடைந்தது!

இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கத்திற்கு உதவியாக எரிபொருள் வந்த மற்றுமொரு கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
40,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு குறித்த கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.
இதற்கிணங்க, நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இந்தியா இதுவரை இலங்கைக்கு கிட்டத்தட்ட 440,000 மெற்றிக் தொன் பல்வேறு வகையான எரிபொருளை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *