எம்பிகளை விலை பேசும் பசில்!
பாராளுமன்றில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அது வெல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பல பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பிக்கை இல்லா பிரேரணையை நிறைவேற்ற முடியும் சஜித் அணி நம்பிக்கை
கடந்த திங்கட்கிழமை இரவு ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 4ம் திகதி பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் மகிந்த ராஜக்ஷவுக்கு ஆதரவாக எம்.பிகளை திரட்டும் வேலைத்திட்டத்தை பசில் முடுக்கிட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது