யாழில் கோர விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்-கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் கெப் வாகனமொன்று மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ். தேவி புகையிரதத்தில் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் பயணித்த கெப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *