றம்புக்கணை சம்பவம் தொடர்பாக பொலிஸ் அறிக்கை வெளியிட்டது!
கடந்த 19ஆம் திகதி றம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி மூன்று நாட்களுக்குள் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் இன்று (21) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் தினத்தில் அமைதியை பேணுவதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக, தேவாலேகம, றம்புக்கணை மற்றும் கேகாலை பொலிஸ் பிரிவுகளில் இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.