“கோட்டா கோ கம” கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றம்!

கொழும்பு – காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம’ கூடாரங்கள் இன்று (17) காலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ,குறித்த கூடாரங்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து பொலிஸார் அவற்றை அகற்றியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ கம’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய காலி நகரில்​ ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில் நேற்று முதல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த இடத்திற்கு நேற்று பகல் சென்ற பொலிஸார், மாலை 04 மணிக்குள் அதனை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *