போராட்டத்திற்கு ஆதிவாசிகளும் ஆதரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதிவாசிகளும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
காலி முகத்திடலுக்கு நேற்று வருகை தந்த ஆதிவாசிகள் இரவு முழுவதும் அங்கு முகாமிட்டு தங்கிருந்து தமது ஆதரை வெளிப்படுத்தினர்.
இன்று 8 ஆவது நாளாகவும் தன்னெழுச்சி போராட்டம் தொடர்கின்றது.