இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!

இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த 3 நாட்களிலும் மின்தடையை அமுல்படுத்தாதிருப்பதற்கான ஒத்துழைப்பு, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் இருந்து கிடைத்துள்ளன.

இதேநேரம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும்.

காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்தாடை அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *