அயுபோ வெவ மகாராஜனேனி பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் மன்னிப்பு கோரினார்!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் போராடிய முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ‘அயுபோ வெவ மகாராஜனேனி’ பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே மன்னிப்பு கோரியுள்ளார்.
மக்கள் நீதிமன்றம் இந்த பாட்டிலிருந்து தன்னை விடுவிக்கும் என்று நம்புகிறார்.
காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இன்று இருந்த இடத்தில் இல்லை என்றும், இன்று தனது குழந்தைகளுடன் தான் இருப்பதாகவும் கூறினார்.