மக்களை அமைதியாக இருக்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் கோரிக்கை
அரசாங்கம் தீர்வு தரும் வரை மக்கள் அமைதியாக இருக்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் உங்கள் செய்தியை பெற்றுக்கொண்டுள்ளது , அவர்களின் தீர்வுகளுக்காக காத்திருப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.