ரணில் பிரதமராகினால் மைத்திரி ஆதரவு ஆதரவளிப்பாராம்!
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்க முன்வருவாராக இருந்தால், அதற்கு மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி ஆதரவளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், தனியார் ஊடகம் ஒன்றில் ஒலிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் நியமிக்கப் போவதே இல்லை என்ற நிலைப்பாட்டில் மைத்திரிபால சிறிசேன இருந்தார்.
அந்த நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டு விட்டாரா? என அவரிடம் கேட்கப்பட்ட போது,
அரசியலில் நிரந்தர எதிரியோ, நிரந்தர நண்பனோ இல்லை என கூறினார்