ஜனாதிபதிக்கு எதிராக காலிமுகத்திடலில் மக்கள் வெள்ளம்!
காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கட்டியை அடுத்து நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் எழுச்சிப் போராட்டம் நாட்டில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி உலக நாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.