பிரதமர் மஹிந்தவின் கொழும்பு இல்லம் முற்றுகை!
கொழும்பு, பொரளை விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் தற்போது பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.
இதன் காரணமாக பிரதமர் இல்லத்தின் வளாகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு கோஷங்களை எழுப்பியும், கலகமற்ற முறையில் நடந்து கொள்வதன் மூலமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.