என்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா சதி!
என்னை பதவியிலிருந்து இறக்க அமெரிக்கா சதி செய்கிறது என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் பதவி விலகுவார் என எதிர்பார்த்தபோது அவர் அதற்கு மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “என்னை பதவியில் இருந்து இறக்க அமெரிக்கா சதி செய்திருக்கிறது. என்ன நடந்தாலும் பதவி விலகமாட்டேன்.
மறுமுறை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்