கடுகஸ்தோட்டை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
கடுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தீ விபத்து இன்று காலை ஏற்பட்டதாக கடுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது