காகிதாகிகள் பற்றாக்குறையால் பரீட்சை வினாத்தாள்களுக்கு பாதிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்யுமாறு இலங்கை ஆசியரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கெப்பிட்டல் செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் தரம் 09, 10, 11 ஆம் ஆண்டுகளுக்குரிய தவணைப்பரீட்சைகளுக்குரிய வினாத்தாள்களுக்கு காகிதாகிகள் பற்றாக்குறையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரீட்சை வினாத்தாள்களுக்கான காகிதாகிகள் அதற்கான மூலப்பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளமையினால் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்