கைப்பேசிகளின் விலைகளை 30 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை!

டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கைப்பேசிகள் மற்றும் துணைப் பொருட்களின் விலைகளை சுமார் 30% அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவிக்கையில்,

“டொலரின் பெறுமதி அதிகரிப்பால் கைப்பேசிகள் மற்றும் துணைப் பொருட்களின் விலையை 30% ஆல் அதிகரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு விலை அதிகரிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சந்தையில் கைப்பேசிகள் மற்றும் துணைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *