உணவகத்தில் ‘நன்றி’ கூறினால் சிறப்புத் தள்ளுபடி!

உணவகமொன்றில் `நன்றி, ப்ளீஸ் , வாழ்த்துக்கள்` போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவர்களுக்கு  சிறப்பு  தள்ளுபடி வழங்கப்பட்டுவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த  ‘தக்ஷின் 5 ‘ என்ற உணவகத்திலேயே இவ்வாறு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வியாபார யுத்தி பலரையும் கவர்ந்துள்ள நிலையில் குறித்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு  அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பலரும்  இவ் உணவகத்தின்  புதிய வியாபார தந்திரத்தை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அவ் உணவகத்தின் உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில் ”இன்றைய உலகில் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சின்னச் சின்ன நற்பண்புகள் மிகவும் அரிதாக தென்படுகிறது. இதனை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த புதிய முயற்சியை நாங்கள் தொடங்கினோம்.” என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *