சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா!

சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்றின் பரவலானது மிக வேகமாக அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிச்வே வைத்தியசாலையின், வைத்தியர் ஹசித்த லியனாராச்சி குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா தொற்று பரவல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில், நாளொன்றிற்கு 30 வரையிலான சிறுவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வாறாயினும், ஆரோக்கியமான சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக குறைவாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த ஐந்து சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் ஹசித்த லியனாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *